Murugan Kaatchi
von C. Balasubramanian
Beschreibung
''ஓம்''என்ற குடிலையே எல்லா வேதங்களுக்கும், எல்லா எழுத்துகளுக்கும், எல்லா ஓசைகளுக்கும் பிறப்பிடம்; காசியம்பதியில் மரிப்பவர் செவியில் சிவபெருமான் கூறும் மந்திரமும் அதுவே யாகும். இதனைத் தாரகம் என்று கூறுவர். பிறவிப் பெருங்கடலைத் தாண்டச் செய்வதனால் தாரகம் எனப்படும்.
ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும் மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான்
எனவரும் கந்தபுராணத் திருவிருத்தத்தால் உணர்க.
அ உ ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையே ஓங்காரமாகும்.
அ-படைத்தல் உ- காத்தல் ம - ஓடுக்கல்
என்ற முத்தொழிலுக்கும் மூலகாரணம் ஓங்காரம். இந்த அகர உகர மகரம் என்ற மூன்றெழுத்தின் இடையில் உள்ள உகரம் நனி சிறந்தது. "உ"நடுநாயகமாக விளங்குகின்றது. இந்த உகரமே எல்லா வுலகங்களையும் எல்லா வுயிர்களையுங் காப்பாற்றுகின்றது.
அ உ ம என்ற முறை, உமஅ என்று மாறுகின்ற போது உமா என்று ஆகின்றது. காக்கும் பராசக்தியைக் குறிக்கின்றது.
திருத்தொண்டர்களைக் காக்கும் அருட்சரிதைகளைக் கூறவந்த திருத்தொண்டர் புராணம் 'உ'என்ற எழுத்தை முதலாகக் கொண்டு 'உலகெலாம்'என்று தொடங்குகின்றது.
Produktdetails
| ISBN | 9788199887756 |
| Verlag | Nilan Publishers |
| Erscheinungsdatum | 01.03.2026 |
| Sprache | tam |